சிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்
Share

பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 48 வயதுடைய நபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். Puttalam Girl
தனது இல்லத்தில் தனிமையில் நித்திரை கொண்டிருக்கும் போது சந்தேக நபர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக இச்சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபர் வயலில் வேலை செய்து வீடு திரும்பும் போது 7 வயதான இந்த சிறுமி தனிமையில் இருப்பதையும் அக்கம் பக்கத்தில் ஒருவரும் இல்லாததையும் கண்டு இச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு கொடுத்த புகாரின் பேரில் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் புத்தளம் நீதவான் முன் ஆஜர்படுத்தவுள்ளார்.
குறிப்பிட்ட சிறுமி புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காகவும் , வைத்திய பரிசோதனைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.